"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

6/04/2013

இறந்து போன நல்லடியார்

தர்ஹா வழிபாடு
இறந்து போன நல்லடியார்களிடம் முஸ்லிம்கள் சிலர் பிரார்த்தனை செய்கின்றனர்.அவர்கள் இறந்து அடக்கம் செய்யப்பட்ட பல ஆண்டுகள் உருண்டோடிய பின்பும் இவ்வாறு பிரார்த்தனை செய்கின்றனர்.
அல்லது ஒரு கிராமத்தை கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது.”இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்? என்று நினைத்தார்.உடனே அவரை அல்லாஹ் நூரு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான்.பின்னர் அவரை உயிர்ப்பித்தான்.”எவ்வளவு நாளை கழித்திருப்பீர்? என்று கேட்டான்.”ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்” என்று அவர் கூறினார்.”அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும்ää பாணமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்து விட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும் அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிரோம் என்பதையும் கபனிப்பீராக!”என்று அவன் கூறினான்.அவருக்குத் தெளிவு பிறந்த போது “அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்”எனக் கூறினார். (அல்குர்ஆன் 2:259)
இவ்வசனத்தில் மிகச் சிறந்த நல்லடியார் ஒருவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்கிறான்.அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பிலேயே அவரது உடல் கிடந்தது.
ஆயினும் தாம் எத்தனை ஆண்டுகள் இவ்வாறு இருந்தோம் என்பதை அவரால் அறிய இயலவில்லை.ஒரு நாள் தூங்கியதாகவே நினைகிறார்.பூமிக்குள் அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பிலேயே இந்த நல்லடியாரின் உடல் இருந்தும் அவரால் தனக்கு என்ன நேர்ந்தது என்பதையே அறிய முடியவில்லை என்றால் பூமிக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்கள் எவ்வாறு இவ்வுலகில் மற்றவர்களின் நிலைகளை அறிவார்கள என்பதைச் சிந்திக்க வேண்டும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்